திருப்பூர், மார்ச் 15: பள்ளிக்கல்வித்துறை சார்பில், வட்டார அளவில் அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான திறன் போட்டிகள் நடந்தன. பெண்கல்வி, சுகாதாரம், இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் ஆகிய தலைப்புகளில் கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போராட்டிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கட்டுரை போட்டியில் கலந்துகொண்ட திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் இஸ்மாயில் வட்டார அளவில் 2-வது இடத்தை பெற்றார். அவருக்கு ரூ.1,300 ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் இஸ்மாயிலை பள்ளியின் தலைமையாசிரியை வித்யா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.