திருப்பூரில் கொடி, பேனர் தயாரிக்கும் பணி தீவிரம்

திருப்பூர், மார்ச் 15: நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ம் தேதி  நடக்கிறது. தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கியுள்ள நிலையில், கொடி, பேனர் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் சூடுபிடித்துள்ளன.  திருப்பூரில் கொடி, பேனர் தயாரிப்பு பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. கருவம்பாளையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில் கொடி, பேனர் தயாரிப்பு தொழில் நடந்து வருகிறது. இதுகுறித்து, கருவம்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக கொடி, பேனர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக கொடிகள், பேனர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழகம் மட்டுமல்லாது, புதுவை, கேரளா மற்றும் சில வடமாநிலங்களில் இருந்து கொடிகள் ஆர்டர் எடுத்து செய்து வருகிறோம். தேசிய அளவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் மாநில கட்சிகளிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ஆர்டர்களை பெற்று பணிகள் நடந்து வருகிறது, என தெரிவித்தனர். டிஜிட்டல் பிளக்ஸ் உள்ளிட்டவற்றின் வரவால் இந்த தொழிலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக கடந்த முறையை விட கூடுதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளது’’ என்றனர்.

Related Stories: