‘கிணற்றை காணோம் கண்டுபுடிச்சி கொடுங்க’

திருப்பூர், மார்ச் 15: திருப்பூர், திருநீலகண்டபுரம் பகுதியில் காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் நேற்று வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர், கொங்குமெயின் ரோட்டிலுள்ள திருநீலகண்டபுரம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. அப்பகுதி மக்கள் தங்களது அன்றாட பயன்பாட்டிற்கு பொது கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கிணற்றில் தண்ணீர் அளவு குறைந்த காரணத்தால் பொதுமக்கள் அந்த கிணற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி அருகில் வசிக்கும் தனியார் ஒருவர் கிணற்றை மண்ணை போட்டு மூடி அதில் வீடுகட்டும் பணியை துவக்கியுள்ளார். இந்நிலையில், அவரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபொழுது பொதுமக்கள் தன்னை மிரட்டுவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பயன்பாட்டிலிருந்த கிணற்றை கண்டுபிடித்து தரக்கோரி வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த சம்பவத்தால் வடக்கு போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: