×

வாகன சோதனையில் ரூ.3.80 லட்சம் பறிமுதல்

கூடலூர், மார்ச் 15: தேர்தல் பறக்கும் படை சிறப்பு தாசில்தார்கள் முஜிபுர் ரகுமான் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் தமிழக எல்லையான நாடுகானி பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளா மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற லாரி ஒன்றை சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3.20 லட்சம் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கர்நாடக மாநிலம் மான்டியாவைச் சேர்ந்த கந்தன் என்பவரிடமிருந்து ரூ.60 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அலுவலர்  மற்றும் ஆர்டிஓ., ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.



Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்