பெ.நா.பாளையம்,மார்ச்15: கோவை அருகே பழங்குடியின மாணவர்கள் தேர்வு எழுத தனியார் பள்ளி வாகனத்தில் செல்ல ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. கோவையை அடுத்த ஆனைகட்டியில் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இதில் நடப்பு கல்வி ஆண்டில் 50 மாணவ,மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆனைகட்டியை சுற்றியுள்ள மலை கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் பொதுத் தேர்வு எழுத ஆண்டுதோறும் சின்னத்தடாகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு 16 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை நீடித்து வந்தது. மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கல்வித்துறை சார்பில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ,மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.