×

அந்தியூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

அந்தியூர், மார்ச் 15:ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கதிரவன் உத்தரவின்படி, வாக்காளர் விழிப்புணர்வு ேபரணி நடந்தது. அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை வட்டாட்சியர் கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தனியார் கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது, வாக்களிப்பது ஜனநாயக கடமை, என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் ரவுண்டான, சந்தை பேட்டை, தேர்வீதி, அரசுமருத்துவமனை கார்னர் ஆகிய முக்கிய வீதி வழியாக சென்று, மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே நிறைவடைந்தது.


Tags : Voter awareness rally ,city ,
× RELATED திருப்புவனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி