பவானியில் இரு இடங்களில் தீ விபத்து

பவானி, மார்ச் 15: பவானியில் அடுத்தடுத்து இரு இடங்களில் தீ விபத்து நடந்தது. பவானியை அடுத்த லட்சுமி நகர், ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி அருகே நிலங்களில் முள், கோரைப் புற்கள் வளர்ந்துள்ளன. தற்போது கடும் வெயில் அடிப்பதால் அவை காய்ந்து கிடக்கிறது. நேற்று முன்தினம் இரவு புற்களில் தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

இதேபோல், பவானி - கவுந்தப்பாடி ரோட்டில் கிரேஸ் நகர் அருகே தீ விபத்து ஏற்பட்டது. செடி, கொடிகளில் பிடித்த தீ, வேகமாக பரவி பனை மரங்களிலும் பற்றி எரிந்தது. பவானி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Related Stories: