வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அந்தியூர், மார்ச் 15: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மந்தை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50) விவசாயி. இவர், நேற்று முன்தினம் விவசாய பணிக்காக தனது தோட்டத்திற்குச் சென்றார். மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து பழனிச்சாமி அந்தியூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: