×

சத்தியமங்கலம் அருகே வாகன தணிக்கையில் ரூ.6.84 லட்சம் சிக்கியது

சத்தியமங்கலம், மார்ச் 15:  நீலகிரி நாடாளுமன்ற  தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடியில் தேர்தல்  பறக்கும் படை அலுவலர்கள் தலைமையில் நேற்று வாகன சோதனைநடந்தது. இதில்,  கேரளாவில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ஒரு காரில் இருந்த மாட்டு  வியாபாரிகள் 7 பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.5  லட்சத்து 84 ஆயிரத்து 500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  செய்தனர்.இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற  ஒரு காரில் இருந்த காய்கறி வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு  செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்படது. மொத்தம் 6 லட்சத்து 84  ஆயிரத்து 500 ரொக்கப்பணத்தை, சத்தியமங்கலம் வட்டாட்சியர் கார்த்திக்கிடம்  தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை  சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக்கொள்ளலாம் என  வட்டாட்சியர் கார்த்திக் தெரிவித்தார்.

Tags : Sathyamangalam ,
× RELATED சத்தியமங்கலம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி..!!