ஈரோடு, மார்ச் 15: ஈரோடு கருங்கல்பாளையம் பச்சியப்பா சந்து பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (31). இவர், ஈரோடு காவிரி வீதி வழியாக நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த வாலிபர், மதுகுடிக்க 200 ரூபாய் பணம் கேட்டார். ஆனால் செந்தில் பணம் தர மறுத்த நிலையில் அந்த நபர் நான் இந்த ஏரியா ரவுடி. பணம் கொடுக்காவிட்டால் கை, கால்களை உடைத்து காவிரி ஆற்றில் வீசி விடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஈரோடு கருங்கல்பாளையம் ரங்கநாதர் வீதியைச் சேர்ந்த சஞ்சய் சொக்கலிங்கம் (35) என தெரியவந்தது.