×

கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து விவசாயியை கொல்ல முயற்சி

அரிவாளால் வெட்டிய 4 பேர் மீது வழக்குகிருஷ்ணகிரி,  மார்ச் 15: கிருஷ்ணகிரி அருகே விவசாயியை வெட்டி கொலை செய்ய முயன்ற 4 பேர்  மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி  அருகே மேலசோமார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காவேரி(48). விவசாயியான  இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் கெம்பன்(65), அவரது மகன்கள்  கார்த்திக்(26), மாதையன்(36) மற்றும் செல்வம்(47) தரப்பினருக்கும் வழித்தட  பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காவேரி தனது  வீட்டில் இருந்தபோது, கார்த்தி, கெம்பன், மாதையன், செல்வம் ஆகியோர்  அத்துமீறி உள்ளே நுழைந்தனர். திடீரென கார்த்திக், கையில் வைத்திருந்த  கொடுவாளால் காவேரியை வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த காவேரி,  கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார்  வழக்குப்பதிந்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். வீடு  புகுந்து விவசாயியை வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : house ,Krishnagiri ,
× RELATED பராமரிப்பு பணிக்காக கண்ணாடி மாளிகை, புல் மைதானம் மூடல்