×

கூட்டணி கட்சியினரை அரவணைத்து சென்று திமுக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, மார்ச் 15:  கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கடுமையாக உழைப்பது என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிரணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய கடுமையாக உழைப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு பகுதியிலும் குழு அமைத்து தேர்தல் பணியில் ஈடுபடுவது. கூட்டணி கட்சியினரை அரவணைத்து சென்று, தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிப்பெற செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், முன்னாள் எம்எல்ஏ., கோவிந்தசாமி, கோவிந்தராஜன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, எக்கூர் செல்வம், பேரூர் செயலாளர்கள் பாபுசிவக்குமார், பாலன், பாபு, தொமுச கிருஷ்ணன், அணிகளின் நிர்வாகிகள் ரஜினிசெல்வம், பழனி, விஸ்வபாரதி, ஆதிமகேந்திரன், டாக்டர். மாலதி நாராயணசாமி, அமீன், சுப்பிரமணி, கதிரவன், தினகரன், வடிவேலன், கருணாநிதி, விஜய்ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

Tags : coalition parties ,candidate ,DMK ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...