×

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

பென்னாகரம், மார்ச் 15:  பென்னாகரம் அருகே, சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, பெரும்பாலை ஊராட்சிக்குட்பட்ட சாணாரப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் பல கிமீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 9 மணியளவில் பென்னாகரம்-மேச்சேரி சாலையில் சாணாரப்பட்டி பேருந்து பஸ் ஸ்டாப் அருகே, காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பேரில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...