×

கடத்தூரில் தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்

கடத்தூர், மார்ச் 15:  கடத்தூரில் தேர்தல் விதிமுறைகள் குறித்து, அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  தர்மபுரி மாவட்டம், கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையையொட்டி, தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்தும், அவற்றை பின்பற்றுவது குறித்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் தலைமை தாங்கி, தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொது செயலாளர் சிவன், பிரசாத், தேமுதிக பொறுப்பாளர் ரகு, பாமக சார்பில் பச்சியப்பன், அருண், காங்கிரஸ் கட்சி சார்பில் முருகன், லட்சுமணன், நாசர், அதிமுக சார்பில் சந்தோஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிப்போம் என உறுதி அளித்தனர்.

Tags : party meeting ,Kadathur ,
× RELATED காங்கிரஸ், மற்ற கட்சிகளை விட ஆட்சி...