×

தர்மபுரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ஜிவி மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு பேசுகையில், ‘தர்மபுரி நாடாளுமன்றம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம். ஸ்டாலின் முதல்வராக வர அனைவரும் பாடுபடுவோம்,’ என்றார்.    கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, முனிராஜ், நகர செயலாளர் தங்கராஜ், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை விசுவநாதன், பிகே முரளி, சண்முகம், சேட்டு, சண்முகம், எச்சனஅள்ளி சண்முகம், செல்வராஜ், குமரவேல், செல்வராஜ், எம்விடி கோபால், குட்டி, அன்பழகன், செங்கண்ணன், சிவபிரகாசம், சித்தார்த்தன், தேசிங்குராஜன், சண்முகநிதி, முல்லைசெழியன், வடமலை முருகன், ஜெயச்சந்திரன், உதயகுமார், வக்கீல் மணி, டாக்டர் செந்தில்குமார் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், மகளிரணிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பொள்ளாச்சியில் அதிமுக முக்கிய பிரமுகரின் துணையோடு கல்லூரி, பள்ளி பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்து அப்பாவி பெண்களை துன்புறுத்திய கயவர்கள் மீதும், இதற்கு துணை போன அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் அனைத்து கிராமத்திற்கும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Dharmapuri District ,Executive Meeting ,DMK ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...