அய்யம்பேட்டை- திருமானூருக்கு இடைேய மினி பஸ் இயக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

பாபநாசம், மார்ச் 15: அய்யம்பேட்டையில் இருந்து திருமானூர் வரை மினி பேருந்தை இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே மணலூர், தேவன்குடி, வீரமாங்குடி வழியாக அணைக்குடி வரை மினி பேருந்து சென்று வருகிறது. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் திருமானூர், அரியலூரில் இயங்கி வரும்   பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகள் உள்ளிட்டவற்றை திருவையாறு, திருமானூரில் சந்தைப்படுத்த செல்கின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த பலர் அரியலூரில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். எனவே மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் நலன்கருதி தற்போது அணைக்குடி கிராமம் வரை இயங்கும் மினி பேருந்தை திருமானூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: