தஞ்சை, மார்ச் 15: உலக சிறுநீரக தினத்தையொட்டி தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிறப்பு சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரக தலைமை மருத்துவர் கணேசா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்க சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.