அரசு உதவிெபறும் பள்ளி ஆண்டு விழா

பாபநாசம், மார்ச் 15: பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டை கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் அரசு உதவிப்பெறும் மகா கணபதி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. கணபதி அக்ரஹாரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கருணாகரன் தலைமை வகித்தார். சின்னதுரை முன்னிலை வகித்தார். கருணாகரன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கிளை மேலாளர் திலீப் பரிசு வழங்கினார். கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.

Related Stories: