×

தீயில் சிக்கி தொழிலாளி சாவு

ரிஷிவந்தியம், மார்ச்15: ரிஷிவந்தியம் அடுத்த யால் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் சீனு (45). இவர் நேற்று  மையனூர் கிராமத்தை  சேர்ந்த மோகிசன் என்பவரது நிலவத்தில் கரும்பு வெட்டுதற்கு சென்றுள்ளார். அப்போது கரும்பு பயிரில் பாம்பு சென்றுள்ளது. இதையடுத்து, வெட்டிய கரும்பு பகுதியில் அதாவது பாம்பு சென்ற பகுதியில், தீ வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ பரவி கரும்பு பயிர் முற்றிலும் எரிய ஆரம்பித்தது. இதில் சீனு தீயில் சிக்கி சம்பவ இடத்தில் இறந்துள்ளார். தகவல் அறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை