×

வாலிபர், பெண் மீது தாக்குதல்

திருக்கோவிலூர், மார்ச் 15:   விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் மேகநாதன் என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அன்பழகன் மகன் தமிழ்மணி (27) என்பவர் தனது நிலத்திற்கு சென்றபோது அவரை வழிமறித்த மேகநாதன் கைகள் மற்றும் பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்மணி கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் மேகநாதன்(30) மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி சகாயசெல்வி (38). இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. மாற்றுத்திறனாளியான அந்தோணிராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சகாயசெல்வி தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சகாயசெல்வி வீட்டிற்கு சென்ற அந்தோணிராஜ், சகாயசெல்வியையும் அவரது தந்தை அருள்மரியநாதனையும் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த 2 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் Aஅனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சகாயசெல்வி கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் அந்தோணிராஜ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை