வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சின்னசேலம், மார்ச் 15: சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன்(32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பிச்சப்பிள்ளை மகன் கருப்பண்ணன் என்பவருக்கும் பாகப்பிரிவினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று கருணாகரன் தந்தை தங்கவேல் தன் வீட்டின் முன் நடந்து சென்றுள்ளார். அப்போது கருப்பண்ணன் அவரை வழிமறித்து திட்டியதாக தெரிகிறது. இதை பார்த்த கருணாகரன், என் அப்பாவை ஏன் திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து கருணாகரனின் தலையில் தாக்கி உள்ளார். மேலும் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து கருணாகரன் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பண்ணனை கைது செய்தனர்.

Related Stories: