பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி

புதுச்சேரி, மார்ச் 15: வில்லியனூர் அருகே உள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (எ) சசிக்குமார் (42). அருகில் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி ஜிப்மரில் அட்டெண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் மோகன்ராஜ் (14), மகள் கேசவர்த்தினி (10) ஆகியோர் ஏம்பலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் 9ம் வகுப்பு படித்து வரும் மோகன்ராஜ் நேற்று காலை பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளதாகவும், அப்போது ஒரு ஆசிரியர் கல்விக்கட்டணம் ஏன் செலுத்தவில்லை? ஏன் ஒழுங்காக படிக்கவில்லை என்று கேட்டு திட்டியதாக தெரிகிறது.

மாணவர்கள் மத்தியில் இதுபோல் கண்டித்ததால்  மனம் உடைந்த மோகன்ராஜ் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டில் இருந்த சில மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவனது பெற்ேறார் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவனை அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: