எல்லைப்பகுதியில் போலீசார் வாகன சோதனை

பாகூர், மார்ச் 15: புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி புதுச்சேரி எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மதுபானம், பணம் உள்ளிட்ட பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடையார்பாளையம் சந்திப்பில், அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சென்ற கார், பைக், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

Related Stories: