அருப்புக்கோட்டை, மார்ச் 15: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டுவிழா நடந்தது. விழாவிற்கு தேவாங்கர் வர்த்தக சங்கத்தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முதல்வர் சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். பழைய மாணவர் சங்கத்தலைவர் தர்மராஜ் சங்க ஆண்டறிக்கை வாசித்தார்.சென்னை ரானே இன்ஜின் வால்வ் நிறுவன முதன்மை துணைத்தலைவர் ராஜ்குமார் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கங்களை வழங்கினார். சென்னை நெக்சஸ் இந்தியா இன்போ சிஸ்டம்ஸ் இயக்குநர் கனகராஜ் பரிசுகள் வழங்கினார். வர்த்த சங்க பொருளாளர் கதிர்வேல், உபதலைவர் செந்திவேல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொணடனர். துணை முதல்வர் கந்தவேல்சாமி நன்றி கூறினார்.