சிவகாசி, மார்ச் 15: சிவகாசி அருகே காணாமல் போன பள்ளி ஆசிரியை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி புதுத் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் மகள் முனீஸ்வரி (25) தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார்.இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரியை தேடி வருகின்றனர்.