×

குருலிங்காபுரம் பகுதியில் சாலை வசதி செய்து தரக் கோரிக்கை

சாத்தூர், மார்ச் 15: சாத்தூரில் உள்ள குருலிங்காபுரம் பகுதியில் சாலை மற்றும் வாருகால் வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் சாலை, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாருகால் வசதி இல்லாததால் குடியிருப்பு அருகே கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.இதனால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் இந்த பகுதியில் முறையான குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட வில்லை. எனவே இப்பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,road facility ,Gurulingapuram ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...