×

ராஜபாளையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் கட்டிடங்கள் இடிப்பு


ராஜபாளையம், மார்ச் 15: ராஜபாளையம் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் கட்டிடள்களை இடிக்கும் பணி நடப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.ராஜபாளையம் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியான அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே புதிதாக கட்டக்கூடிய கட்டிடத்திற்காக பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடக்கிறது.இப்பணியை பாதுகாப்பற்ற நிலையில் செய்வதால் அப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகமோ காவல்துறையோ கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கட்டிடம் இடிக்கப்படும் பகுதியில் எந்த ஒரு பாதுகாப்பு வளையம் இல்லாமல் பணிகளை செய்து வருகின்றனர். பணிகளை செய்வது வருபவர்களும் எந்த ஒரு பாதுகாப்பில்லாத நிலையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருக்கும் பட்சத்தில் கட்டிட இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதை உடனடியாக தடுத்து மேற்கொண்டு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாத வண்ணம் இப் பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Demolition ,buildings ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...