×

தாய் திட்டியதால் விரக்தி பட்டதாரி பெண் தற்கொலை

சிதம்பரம், மார்ச் 15: சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகள் ரம்யா (26). இவர் பி.இ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். நேற்று முன்தினம் ரம்யாவிடம் அவரது தாய் ஏன் வேலை எதுவும் செய்யாமல் இருக்கிறாய் எனக் கேட்டு திட்டியதாக தெரிகிறது. இதனால் ரம்யா கோபித்துக்கொண்டு அதே ஊரில் லால்கான் தெருவில் உள்ள அவரது பெரியப்பா பரசுராமன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு யாருமில்லாத நேரத்தில் அறையின் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டுக் கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ரம்யாவை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமதாஸ் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்