×

பைக் மோதி மூதாட்டி பலி

பண்ருட்டி, மார்ச் 15: பண்ருட்டி அருகே பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி இவரது மனைவி நவநீதம் (70). கடந்த 7ம் தேதி பொருட்கள் வாங்குவதற்காக பண்ருட்டிக்கு வந்தார். பின்னர் காந்தி ரோட்டில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக சாலையை கடந்த போது அவ்வழியே வேகமாக வந்த பைக் இவர் மீது ேமாதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த நவநீதத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நவநீதம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அய்யனார் பண்ருட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற பைக் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags : murderer ,
× RELATED நெல்லையில் கொலையானவரின் உடலை வாங்க மறுப்பு.: உறவினர்கள் போராட்டம்