×

2 கிலோ கஞ்சா ஒருவர் கைது

மேலூர், மார்ச் 15: மேலூர் அருகே கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவுப்படி மேலூர் பகுதியில் தனிப்படை பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று தனிப்பிரிவு எஸ்ஐ ஸ்டீபன் ராஜ் தலைமையிலான போலீசார் கிடாரிபட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கிடாரிபட்டியை சேர்ந்த கருப்பையா (55) என்பவரது வீட்டில் வைத்து கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, வீட்டிலிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கருப்பையாவை மேலவளவு போலீசில் ஒப்படைத்தனர்.


Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...