வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் நகை திருட்டு

மதுரை, மார்ச் 15: விராட்டிபத்துவில் வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் நகை, ரூ.36 ஆயிரம் ரொக்கத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அழகுமீனா (41). இவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் வெளியூர் சென்றனர். மீண்டும் நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 24 பவுன் நகை, 36 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அழகுராணி எஸ்எஸ்காலனி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: