பெண்ணிடம் 4 பவுன் பறிப்பு

அவனியாபுரம், மார்ச் 15: பெருங்குடி அருகே வலையபட்டியை சேர்ந்தவர் விஜயவள்ளி (35). கூலித்தொழிலாளி. நேற்று இவர் கண் பரிசோதனைக்காக திருமங்கலம் சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பஸ்நிறுத்த பகுதியில் நடந்து சென்ற போது டூவீலரில் வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்த சென்று தப்பி விட்டனர். பெருங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: