ரோட்டில் கிடந்த முதியவர் மீட்பு போலீசாரின் மனிதநேயத்திற்கு பாராட்டு

மதுரை, மார்ச் 15: மதுரையில் கேட்பாரற்ற நிலையில் ரோட்டில் கிடந்த முதியவரை போலீசார் மனிதநேயத்துடன் மீட்டு சிகிச்சை வழங்கி காப்பகத்தில் சேர்த்தனர்.  மதுரை தெப்பக்குளம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரை நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்று விட்டார். உடல்நலம் பாதித்து தவித்த முதியவரை கண்ட அப்பகுதி கடைக்காரர்கள் அவருக்கு தேநீர் வழங்கி உபசரித்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் விசாரித்ததில் அவர், தூத்துக்குடியைச் சேர்ந்த நாராயணன் என்பது தெரிந்தது. தொடர்ந்து, உடல் நலக்குறைவினால் எழ முடியாத நிலையில் இருந்த முதியவரை மீட்ட போலீசார், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, முதலுதவி சிகிச்சை வழங்கினர். பின்னர் அவரை தனியார் முதியோர் காப்பகத்தில் சேர்த்தனர். போலீசாரின் மனிதநேயத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: