×

வத்தலக்குண்டு காவல்நிலையமா, காயலான் கடையா? நீண்டகாலமாக நிற்கும் வாகனங்கள்



வத்தலக்குண்டு, மார்ச் 15: வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் நீண்டகாலமாக நிற்பதால் காயலான் கடை போல் காணப்படுகிறது. இதனால் போலீசார் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த இடமின்றி தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் விபத்தில் சிக்கிய மற்றும் வழக்குகள் உடைய நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், பல கார்கள், வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை நீண்ட காலமாக நிற்பதால் மழை, வெயிலுக்கு தூசு படிந்து அலங்கோலமாக காணப்படுகின்றன.

இதனால் காவல்நிலையம் பார்ப்பதற்கு காயலான் கடை போல உள்ளது. அதேபோல் அருகில் உள்ள பழைய காவல் நிலையத்திலும் ஏராளமான விபத்தில் சிக்கிய வாகனங்கள் குவிந்துள்ளன. இதனால் போலீசார் மோட்டார் சைக்கிள்களை வெளியில் சாலையில் நிறுத்த வேண்டியுள்ளது. எனவே நீண்டகாலமாக நிற்கும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Police Station ,Battalk ,Canalan ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...