×

விஷம் குடித்த மாணவி


செம்பட்டி, மார்ச் 15: செம்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், இதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரது பெற்றோர், மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி விஷம் குடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...