×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 1,033 பேர் ‘ஆப்சென்ட்’

திண்டுக்கல், மார்ச் 15: திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆயிரத்து 33 பேர் ஆப்சென்ட்டாகி இருந்தனர்.தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. வழக்கமாக காலையில் நடக்கும் மொழி முதல்தாள் தேர்வு நேற்று பகல் 2 மணிக்கு நடந்தது. இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 186 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். ஆனால் 26 ஆயிரத்து 153 பேர் மட்டுமே எழுதினர். ஆயிரத்து 33 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டம் முழுவதும் 103 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை கலெக்டர் வினய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்