×

ராகுல்காந்திக்கு எதிராக போராடிய 125 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், மார்ச் 15:காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 இடங்களில் போராட்டம் நடத்திய 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ராகுல்காந்தி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சுகிராமம் ஜங்ஷனில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மணிகண்டன் உள்ளிட்ட 119 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் அருள்சிவா தலைமையில் போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 இடங்களிலும் நடந்த போராட்டத்தில் 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Rahul Gandhi ,
× RELATED சொல்லிட்டாங்க…