பள்ளி ஆண்டு விழா

தூத்துக்குடி, மார்ச் 15: தூத்துக்குடி பால அக்ஷயா மழலையர் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. தூத்துக்குடி  தாமோதரன் நகர் பால அக்ஷயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 27வது  ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் தாமோதரன் தலைமை  வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். விழாவில்,  கோல்டன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் முன்னாள் தாளாளர் சரவணன்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகள், மாறுவேடப் போட்டி  உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி  பேசினார். இதில், ஆசிரிய -ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்  உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும்  நடந்தது.

Related Stories: