புதுக்கோட்டை, மார்ச் 15: வாகைக்குளம் மதர் தெரசா கல்லூரியில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில் மிட்சுபா சீகால், எல்காம்போ, கோட்டையூர் இன்ஜினியரிங் நியூ ஆல் இன்ஜினியரிங் மற்றும் வேலியூட் எபிஸ்டெமிக்ஸ் ஆகிய நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் 61 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்களுக்குரிய வேலை நியமன ஆணையை பெற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜெரால்டு ஜெபகுமார், துனை முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் பேராசிரியர் ரவீந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.