×

வந்தவாசி அருகே மருந்து என நினைத்து விஷம் குடித்த முதியவர் சாவு

வந்தவாசி, மார்ச் 15: வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(50). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 4 வருடங்களாக வீட்டிலியே மருந்து, மாத்திரைகள் கொடுத்து கவனித்து வருகின்றனர். இவருக்கு மகேஸ்வரி(47) என்ற மனைவும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 3 மகன்களும் வெளியில் சென்று இருந்தனர். மகேஸ்வரி மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை, மருந்து என நினைத்து தவறுதலாக நாரயணன் குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Vandavasi ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு