×

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை, மார்ச் 15: நூறு சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடந்தது. அதில், கலெக்டர் கலந்துகொண்டார். மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதையொட்டி, வாக்காளர்களிடம் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு, அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். மேலும், வாக்காளர்களின் கைகளில் விழிப்புணர்வு ரிப்பன்களை கட்டினார்.

அதைத்தொடர்ந்து, தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. அப்போது, தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடி, ஜனநாயகத்தை பாதுகாக்க நூறு சதவீதம் வாக்குப்பதிவுக்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் வலியுறுத்தினர்.

Tags : Collector ,Tiruvannamalai ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...