×

வேலூர் அருகே ரவுடிகள் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர், மார்ச் 15: வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர்கள் மணி என்கிற மணிகண்டன்(23), பழனி(28), தங்கராஜ்(28), வினோத்குமார்(23), தோட்டபாளையம் சதீஷ் என்ற சதீஷ்குமார்(26) ஆகியோர் கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தினகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பிரவேஷ்குமார், கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.

Tags : persons ,Vellore ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது