கோவை, மார்ச் 14: புதிய பாடத்திட்டத்தில் எழுதிய பிளஸ்1 கணித தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிளஸ்1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில், நேற்று கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயோலஜி, நியூட்ரிசியன், டெக்ஸ்டைல் மற்றும் ஆடைவடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வுகளை கோவை மாவட்டத்தை சேர்ந்த 34 ஆயிரத்து 382 பேர் எழுத இருந்தனர். இதில், தேர்வினை 32,826 பேர் எழுதினர். 1,556 பேர் தேர்வு எழுதவில்லை. இதில், வணிகவயில் தேர்வினை அதிகபட்சமாக 926 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று நடந்த கணித தேர்வு மிகவும் கடினமாக இருந்தாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.