×

திருமணமான 3வது நாளில் விபரீதம் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

சேத்துப்பட்டு, மார்ச் 14: சேத்துப்பட்டு அடுத்த ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் காயத்ரி வயது(22). இவருக்கும் சின்ன சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் மகன் ராஜேஷ்(25) என்பவருக்கும், பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் கடந்த 10ம் தேதி களம்பூரில் திருமணம் நடந்தது. இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றுவிட்டு, பெண் வீடான ஊத்தூர் கிராமத்திற்கு சென்றனர். தொடர்ந்து, புதுமண தம்பதிகளை அழைத்துச்செல்ல பிள்ளை வீட்டார் நேற்று ஊத்தூர் வந்தனர். அப்போது, காயத்ரி குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், பெற்றோர் அவரை தேடினர். அப்போது, காயத்ரி வீட்டின் பின்புறம் இருந்த மாட்டுக்கொட்டகையில் தூக்குப்போட்ட நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை உடனடியாக தேவிகாபுரம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை