×

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, மார்ச் 14: ஆரணி அருகே திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை, பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(26). இவரது மனைவி பச்சையம்மாள். முருகன், ஆரணி அடுத்த சேவூரில் உள்ள தனியார் பட்டு மில்லில் வேலை செய்து வருகிறார். மேலும், அதே கிராமத்தை 17 வயது சிறுமியும் அதே மில்லில் வேலை செய்கிறார். ஒரே இடத்தில் வேலை செய்து வருவதாகல் சிறுமிக்கும், முருகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. விசாரித்ததில், அவரை முருகன் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிந்து சிறுமியையும், அவரை கடத்திச்சென்றாக கூறப்படும் முருகனையும் தேடிவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் முருகன் இருந்தபோது, ஆரணி தாலுகா போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் சிறுமியை, வேலூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்க வைத்து இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், முருகன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை ஆரணி அருகே உள்ள குழந்தைகள் நலகாப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...