பனைக்குளத்தில் அபாய வாறுகால் மூடல்

சாத்தான்குளம், பிப். 22:  பனைக்குளம் ரேஷன் கடை முன்பு தண்ணீர் வடிந்து செல்ல தோண்டப்பட்ட வாறுகாலால் விபத்து அபாயம் நிலவியது. இதுகுறித்து தினகரனில் வெளியான செய்தி எதிரொலியாக வாறுகாலை அதிகாரிகள் மூடியுள்ளனர். சாத்தான்குளம் அருகே பனைக்குளத்தில் தேங்கி நின்ற தண்ணீர் வடிந்து செல்ல ரேஷன் கடை வழியாக வாறுகால் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டு இருமாதங்களுக்கு மேலாகியும் குழாய் பதித்து சீரமைக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் உருவான வாறுகாலில். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர் உள்ளி–்டட கிராம மக்கள் பலரும் தவறிவிழுந்தனர். தொடர்ந்து விபத்து அபாயம் நிலவியது குறித்து தினகரனில்  செய்தி வெளியானது. இதையடுத்து  இதில் கவனம் செலுத்திய அதிகாரிகள் ரேஷன் கடை முன்பு தண்ணீர் வடிந்து செல்ல குழாய் அமைத்து வாறுகால் மூட நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் தற்போது வாறுகால் மூடப்பட்டுள்ளது.

Related Stories: