மங்களகிரி ஜோசப் பள்ளியில் சமய மன்ற விழா

புதுக்கோட்டை, பிப். 22:  மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமய மன்ற விழா நடந்தது.புதுக்கோட்டை அருகே மங்களகிரியில் இயங்கிவரும் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சமய மன்ற விழா நடந்தது. 9ம் வகுப்பு மாணவிகள் இறைவணக்கம்  பாடினர். புதுக்கோட்டை வணிக பேரவை நிர்வாகி ஆனந்த், தூத்துக்குடி சமாதான குழு தலைவர்  சுலைமான் கான், பள்ளித் தாளாளரும் முதல்வருமான பங்குத்தந்தை ரூபர்ட் அடிகளார் சிறப்புரையாற்றினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய  நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. 9ம் வகுப்பு மாணவி சாரோன் ஷீபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் நிர்மல்ராணி, மெல்ரோஸ் செய்திருந்தனர்.

கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோவில்பட்டி, பிப். 22:  கோவில்பட்டி நகரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இன்று (22ம் தேதி) மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. கோவில்பட்டி நகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சாலை விரிவாக்கப்  பணிகளுக்காக அதாவது சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இன்று (22ம் தேதி) மேற்கொள்ளப்படுகின்றன.   இதனால் கோவில்பட்டி நகர் மற்றும் மேற்கு மின்விநியோகத்திற்கு உள்ளிட்ட கோவில்பட்டி மெயின்ரோடு பத்மா கிளினிக் முதல் ரகுராம் திருமண மண்டபம் வரை  மற்றும் சீனிவாச அக்ரஹாரம் தெரு, தட்சிணாமூர்த்தி கோவில் தெரு,  ரேவாபிளாசா லாட்ஜ் அருகே ஆகிய பகுதிகளில் இன்று (22ம் தேதி) காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.  இத்தகவலை கோவில்பட்டி கோட்ட  மின்விநியோக செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

Related Stories: