சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த தொழிலாளி சாவு

சாத்தான்குளம், பிப். 22:  சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.வைகுண்டம் அருகே நளன்குடியை சேர்ந்த துரைப்பழம் மகன் முருகன்(38). கட்டிடத் தொழிலாளியான இவர் சாத்தான்குளம் அருகே வசவப்பநேரியில்  தங்கி இருந்து  கட்டிட பணி க்கு சென்று வந்தார். குடிப் பழக்கம் காரணமாக சரிவர வேலைக்கு செல்லாததால் மனைவி இவரை கண்டித்தாராம்.  இதனால் விரக்தியடைந்த முருகன், கடந்த 17ம்தேதி விஷம்குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் விசாரித்து வருகிறார்.

Related Stories: