நாங்குநேரி, பிப். 22: மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கோடன்குளம் மணிமுத்தாறு கால்வாயில் மணல் திருட்டு நடப்பதாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ மணிவண்ணன் மற்றும் போலீசார் நம்பிராஜன், லட்சுமிநாராயணன் கண்ணன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அனுமதியின்றி ஜேசிபி இயந்திர உதவியுடன் மணிமுத்தாறு ஓடையில் வாகனங்களில் மணல் அள்ளிக் கொண்டிருந்த கூந்தன்குளத்தை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் தளவாய்பாண்டி (21), கோடன்குளம் பொன்ராஜா (29) ஆகியோரை கைது செய்தனர். ஜேசிபி இயந்திரம், மினிலாரி, டிராக்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் தப்பியோடிய சாத்தான்குளம் கலுங்குவிளையை சேர்ந்த ஐசக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.