நாலுமாவடியில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்

நாசரேத், பிப். 22: நாலுமாவடியில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி  மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம் நேற்று (21ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் சிறப்பு செய்தி அளித்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.  இதில் குடும்ப ஆசீர்வாதத்திற்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: